Description
அன்புடன்:
இந்த பிரபஞ்சத்தில் உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் பொதுவானது. காதலினால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது. தாய் மீது காதல், தந்தை மீது காதல், உறவினர்கள் மீது காதல், நண்பர்கள் மீது காதல் பொன் மீது காதல்,பொருள் மீது காதல், தீரா ஆசையின் மீது காதல், இவ்வாறு காதல் அனைத்திலும் நிரம்பி வழிகிறது. இந்த காதல் சற்றே விசித்திர குணமுடையது. காதல் ஒன்று தான் ஆனால் அதனை பாவிக்கும் நபர்களுக்கு ஏற்ப மாறுப்படும். காதல் முதலில் ரசிக்க வைக்கும், ஏங்க வைக்கும்,சிரிக்க வைக்கும், தனியாக புலம்ப வைக்கும், காதல் காத்திருக்க வைக்கும், காதல் சேரும்,காதல் பிரியும், காதல் அழவைக்கும், காதல் விழ வைக்கும், வீழ்ந்து எழ வைக்கும், காதல் காயம் தரும்,காதல் மருந்தாகும், காதல் பைத்தியமாக்கும், காதல் புரியாது, காதல் அனைத்தையும் மறக்க செய்யும், கோபங்களை மட்டும் வெளிகாட்டும், அன்பை மறைத்தே வைக்கும், காதல் நினைக்க வைக்கும், நல் நிகழ்வை நிகழ்த்தும், அதில் துன்பத்தை நிரப்பி வைக்கும்.காதல் ரசித்தவர்களை வெறுக்க வைக்கும், வெறுத்தவர்களை அடிக்கடி நினைக்க வைக்கும் .விலகினாலும் காதல் அங்கு இருக்கும், வெறுத்தாலும் காதல் காதலித்துக்கொண்டு தான் இருக்கும். இணைத்து இருப்பவர்களை விட பிரிந்து இருப்பவர்களிடம் தான் காதல் அதிகரிக்கும், அதே காதல் அவர்களை பிரித்தே வைக்கும். இவ்வாறு காதல் அனைத்திலும் நிரம்பி வழிகின்றது. காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் காதலிக்காக காத்திருப்பவர்களுக்காகவும் காதலிக்க போகின்றவர்களுக்காகவும் இந்த மதியின் ரங்கம்மாள் என்ற படைப்பு. இதில் ஏதேனும் பிழையோ, தவறோ இருப்பின் தயவுடன் மன்னித்து உங்கள் அன்பினையும் ஆதரவினையும் அள்ளிக்கொடுத்து அருளவும்…
Highlights
Language: Tamil
Binding: Paperback
Publisher: Aelay Publish
Genre: Poetry
ISBN: 9789355330314
Edition: First Edition, 2021
Pages: 172
Reviews
There are no reviews yet.